நீலகிரியில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஊட்டி,ஏப்.17: நீலகிரி மாவட்டத்தில் நேற்று 48 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 113 ஆக உயர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று 48 பேருக்குபாதிக்கப்பட்ட நிலையில்,  பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,113 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 8,776 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 286 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உள்ளது.

Related Stories: