கோவையில் ஒரே நாளில் 583 பேருக்கு கொரோனா உறுதி

கோவை, ஏப். 17: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே நேற்று புதியதாக 583 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 993 ஆக உள்ளது. மேலும்,  கொரோனாவுக்காக சிகிச்சைப்பெற்று வந்த 622 பேர் நேற்று குணமடைந்த நிலையில்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின்  எண்ணிக்கை 60 ஆயிரத்து 885 ஆக உயர்ந்தது. தவிர, தற்போது கோவை அரசு  மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 402 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். நேற்று கொரோனா  தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனா தொற்றினால் கோவையில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 706 ஆனது.

Related Stories: