அண்ணாநகர்: சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (72). இவரது மகன் ராஜிவ் (38). இவர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு, சோழிங்கநல்லூரை சேர்ந்த சங்கர் (56), தொழில் தொடர்பாக அறிமுகமானார். அப்போது, தமிழக பொதுப்பணி துறையில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் கூறுங்கள், என பாலகிருஷ்ணன், ராஜிவ் ஆகியோர் சங்கரிடம் கூறியுள்ளனர்.இதனையடுத்து, தனது மகனுக்கு வேலை வாங்கி தரும்படி, சங்கர் கூறியுள்ளார். அதற்கு, ₹25 லட்சம் செலவாகும் என பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் தெரிவித்துள்ளனர்.