பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் நாளை மின்சார ரயில் சேவையில் மாற்றம் ெசய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மூர்மார்க்கெட்-ஆவடி இடையே இரவு 10.20, 11.45 மணி, மூர்மார்க்கெட்- திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணி, வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணி, ஆவடி-மூர்மார்க்கெட் இடையே மாலை 6.15 மணி, திருவள்ளூர்-ஆவடி இடையே இரவு 10.10 மணி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-மூர்மார்க்கெட் இடையே இரவு 10.45 மணி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 11.55 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் இடையே இரவு 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்-ஆவடி இடையே இரவு 12.15 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இடையே காலை 6.40, 7.20, 7.55 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையே காலை 8 மணி, ஆவடி-மூர்மார்க்கெட் இடையே காலை 4.30, 5, 5.20, 5.45, 6.10 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் இடையே காலை 4.40, 5.55, 6.25 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் இடையே காலை 5.30 மணிக்குக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை (18ம் தேதி) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. வேளச்சேரி- ஆவடி இடையே இரவு 8.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று சென்னை கடற்கரை-ஆவடி இடையே பகுதியாக ரத்து செயப்படுகிறது. வேளச்சேரி-ஆவடி இடையே காலை 6.05, 7.25 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி இடையே காலை 7.50 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி இடையே காலை 9, 10.05, 12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று வில்லிவாக்கம்-ஆவடி இடையே விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும்.

ஆவடி-வேளச்சேரி இடையே காலை 8, 8.45 மணி, ஆவடி-மூர்மார்க்கெட் இடையே காலை 9.20, 9.55, 11, 1.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஆவடி-வில்லிவாக்கம் இடையே விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும். மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையே காலை 5.30, 7, 7.40 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இடையே காலை 5.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் மூர்மார்க்கெட்-ஆவடி  இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.  அரக்கோணம்-மூர்மார்க்கெட் இடையே இரவு 10.05 மணி மற்றும் திருவள்ளூர்-ஆவடி இடையே 11.05 மணிக்கு பயணிகளின் வசதிக்காக இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

Related Stories: