லாரி திருடிய டிரைவர் கைது

புழல்: புழல் என்எஸ்கே தெருவை சேர்ந்த மேகநாதன் (56), என்பவரின் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் விஜயநல்லூர் அறிஞர் அண்ணா நகரை சேர்ந்த நரேஷ் (34), டிரைவராக வேலை செய்துள்ளார். இவரின் நடத்தை சரியில்லாததால் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நரேஷ், மேகநாதனை பழிவாங்கும் நோக்கில், லாரி கிளீனராக வேலை செய்யும் அதே பகுதியை சேர்ந்த கிருபாகரனுடன் (34) சேர்ந்து லாரியை திருடி சோழவரம் பெருங்காவூரில் வசிக்கும் மாமனார் ராஜா (48) வீட்டில் நிறுத்தியுள்ளார். இவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: