60 நாட்களுக்கு மதுவை நினைக்காதீர்கள் செவிலியர்கள் அறிவுரை

காரைக்கால், ஏப்.16: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 4 நாட்கள் நடத்த இம் முகாம், மேலும், நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 18ம் தேதி வரை முகாம் நடைபெறும். வரிச்சிகுடி காரைக்கால் மேடு உள்ளிட்ட பகுதிகளில் 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடத்தில் 60 நாட்களுக்கு மது அருந்தக் கூடாது என்று செவிலியர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து காரைக்கால் அருகே செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 132 பேருக்கு நேரில் சென்று தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories: