சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.46.63லட்சம் உண்டியல் காணிக்கை

மண்ணச்சநல்லூர்,ஏப்.16: சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்கும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் மாதம் இருமுறை எண்ணப்படுகின்றன. கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நேற்று மொத்தம் 37 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.ஐஓபி பணியாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கல்லூரி மாணவிகள் தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் பணத்தை எண்ணி தங்கம் வெள்ளி நகைகள் அயல்நாட்டு கரன்சிகளை கணக்கெடுத்தனர். கணக்கெடுப்பின் முடிவில் உண்டியலில் ரொக்கமாக ரூ. 46 லட்சத்து 63ஆயிரத்து853.தங்கம் 1.கிலோ 1.007கிராம்.வெள்ளி1.கிலோ1.160.கிராம் மற்றும் அயல்நாட்டு ரூபாய் 19 இருந்தன. இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன. இதற்கு முன்பாக கடந்த வாரம் 8ம்.தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: