ஊட்டி,ஏப்.16: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊட்டி அருகேயுள்ள கடநாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதிப்பு குறைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் உள்ள ஊராட்சி மற்றும் ேபரூராட்சி நிர்வாகங்கள் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்தல், முககவசம் அணிதல் மற்றும் கிருமி நாசினியை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள கடநாடு ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் வீதி வீதியாக கொண்டு கிருமிநாசினியை மோட்டார்கள் பயன்படுத்தி தெளித்து வருகின்றனர். ேமலும், தலைவர் சங்கீதா சிவமணி தலைமையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். முகவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், அடிக்கடி கை கழுவதல் போன்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.