காஞ்சிபுரம், ஏப்.16: காஞ்சிபுரத்தில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (19). இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த பிரவீன், பொய்யாகுளம் யுகேஷ். கடந்த 15 நாட்களுக்கு முன் 3 பேரும், மது அருந்திவிட்டு, தெரு மக்களை மிரட்டியுள்ளனர். இதனை பொதுமக்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 3 பேரும், தங்களை கண்டால், அப்பகுதி மக்கள் பயப்பட வேண்டும் என திட்டமிட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருக்காலிமேட்டை சேர்ந்த ரியாஸ் (27 ) என்ற வாலிபர், அவரது வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற அரிகிருஷ்ணன், பிரவீன், யுகேஷ் ஆகியோர், ரியாசிடம் தகராறு செய்தனர்.