ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: ஆவடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், புறநகர் ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 9.30, 9.45, 11.30, பிற்பகல் 12 மற்றும் மதியம் 1 மணிக்கு திருவள்ளூர் வரை இயக்கப்படும் ரயில்கள், சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 9.50, 11.05, மற்றும் பிற்பகல் 12.50 மணிக்கு அரக்கோணம் வரை இயக்கப்படும் ரயில்கள், சென்ட்ரலிலிருந்து காலை 10, மற்றும் 11.45 மணிக்கு திருத்தணி வரை இயக்கப்படும் ரயில்கள், சென்ட்ரலிலிருந்து காலை 10.30 மற்றும் பகல் 12.10 மணிக்கு கடம்பத்தூர் வரை இயக்கப்படும் ரயில்கள், வேளச்சேரியிலிருந்து காலை 9.05 மற்றும் பிற்பகல் 12.15 மணிக்கு திருவள்ளூர் வரை இயக்கப்படும் ரயில்கள், வேளச்சேரியிலிருந்து காலை 11.20 மணிக்கு திருத்தணி வரை இயக்கப்படும்.

சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.20 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் சுற்றுவட்டப் பாதை ரயில் ஆகிய 16 ரயில்கள் இந்துக் கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் இன்று நிற்காமல் செல்லும்.

புறநகர் சிறப்பு ரயில்கள் இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும்.வேளச்சேரியிலிருந்து காலை 9.15 மணிக்கு, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் வரை இயக்கப்படும் ரயில், சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 11.15, பிற்பகல் 12.20 மற்றும் மதியம் 1.15 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் வரை இயக்கப்படும்  ரயில் ஆகிய 4 புறநகர் ரயில்கள் இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் இன்று நிற்காமல் செல்லும்.

Related Stories: