சென்னை: கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று சென்னையில் இருந்து புறப்படும் 18 விமானங்களும், சென்னைக்கு வரும் 18 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 36 விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் அலை மிக பெரிய அளவில் தமிழகத்தில் தாக்குதலை தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாமல் நேற்று முன்தினம் 18 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.