சேந்தமங்கலம், ஏப்.16: புதுச்சத்திரம் அருகே கட்டிய 2 மாதத்தில் கழிப்பிட சுவற்றில் விரிசல் விட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். புதுச்சத்திரம் ஒன்றியம் நவணி ஊராட்சி வாணக்காரன்புதூர் அருந்ததியர் தெருவில், பொதுக்கழிப்பிடம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தூய்மை பாரதம் ஊரகம் திட்டத்தின் கீழ், ₹2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்நிலையில், கழிப்பிட சுவற்றில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை காணப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.