நாமக்கல், ஏப்.16:நாமக்கல்லில், மாவட்ட டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விமல்ராஜ் தலைமை வகித்தார். டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு, கோரிக்கைகள் குறித்தும், ரப்பர் விலையேற்றம் மற்றும் அதனால் ஏற்படும் தொழில் பாதிப்புகள் குறித்தும் விளக்கினார். கொரோனா காலகட்டத்தில் வாகனங்கள் சரிவர இயங்காததால், கனரக வாகனங்கள் அதிகமுள்ள நாமக்கல், சங்ககிரி, சேலம், ஈரோடு மற்றும் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் இயங்கி வரும் டயர் ரீட்ரேடிங் தொழிலை இன்று வரை சரிவர நடத்த முடியவில்லை.