மூதாட்டி சடலம் மீட்பு

சேந்தமங்கலம், ஏப்.16: புதுச்சத்திரம் அருகே தத்தாதிரிபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன்(35). இவர், நேற்று காலை, வழக்கம்போல் தோட்டத்திற்கு சென்று, மோட்டாரை போட முயன்றார். அப்போது, கிணற்றுக்குள் பெண் சடலம் மிதப்பதைக் கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், எஸ்ஐ பூங்கொடி தலைமையிலான போலீசார் வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சடலமாக கிடந்தவர் போயர் தெருவைச் சேர்ந்த பெரியசாமியின் மனைவி அருக்காணி(67) என்பது தெரியவந்தது. பெரியசாமி ஏற்கனவே இறந்த விட்ட நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட அருக்காணி, பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், தோட்டத்து பக்கமாக சென்றபோது கால் தவறி கிணற்றில் விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: