கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை

ேசந்தமங்கலம், ஏப்.16: புதுச்சத்திரம் அருகே திருமணமன 35 நாளில் கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சந்திரம் அருகே அய்யம்புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி உதயகுமார். இவரது மனைவி குடும்பத் தகராறில் 9 வயது மகளுடன் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகள் விஜயலட்சுமி(28) என்பவரை, உதயகுமார் மறுமணம் செய்து கொண்டார். கடந்த 35 நாட்களுக்கு முன்பு தான் இவர்களது திருமணம் நடைபெற்றது.

திருமணமானது முதலே கணவன்- மனைவிக்கிடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. அப்போது, எங்காவது கண் காணாத இடத்திற்கு சென்று விடுவேன். தற்கொலை செய்து கொள்வேன் என விஜயலட்சுமி கூறி வந்துள்ளார். அவரை அக்கம்- பக்கத்தினர் சமரசப்படுத்தி வந்த நிலையில், நேற்று காலை ஊருக்கு அருகே தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் விரைந்து சென்று விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஜயலட்சுமிக்கு திருமணமாகி 35 நாட்களே ஆவதால், நாமக்கல் கோட்டாட்சியர் கோட்டை குமார் விசாரித்து வருகிறார். திருமணமாகி 35வது நாளில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

Related Stories: