வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம்

கிருஷ்ணகிரி, ஏப்.16: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே ஆஞ்சலகிரி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தா (40). இவரது கணவர் கிருஷ்ணப்பா இறந்துவிட்டார். தேவசானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான முனிகிருஷ்ணன் (32) என்பவர் நேற்று முன்தினம் இரவு சாந்தா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சாந்தாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு  தகராறு செய்துள்ளார். சாந்தா மறுப்பு தெரிவித்ததால், முனிகிருஷ்ணன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து சாந்தா உத்தனப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்.ஐ சரவணன் வழக்கு பதிவு செய்து முனிகிருஷ்ணனை கைது செய்தார்.

Related Stories: