கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி சிறுமி பலி

திருவள்ளூர், ஏப்.15: திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் விழுந்த சிறுமி, பரிதாபமாக இறந்தாள். திருவள்ளூர் அடுத்த தண்ணீர் குளம் கஜேரிகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி துர்கா. கீரை வியாபாரிகள். இவர்களது மகள் கோபிகா (8). அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை துர்கா தனது மகள் கோபிகாவை அழைத்து கொண்டு, கஜேரிகுளம் அருகே பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் துணி துவைக்க சென்றார். அங்கு துர்கா துணி துவைத்துக் கொண்டிருந்தபோது அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கோபிகா கால்வாய் இறங்கினாள்.

அப்போது நிலைதடுமாறி கால்வாயில் விழுந்து தண்ணீரில் அடித்துச் சென்று விட்டார். மகள் தண்ணீரில் அடித்துச் செல்வதை பார்த்த துர்கா அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள், சிறுமி கோபிகாவை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. தகவலறிந்து திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று இரவு வரை தேடினர் ஆனால் சிறுமி இந்நிலையில், நேற்று காலை பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று கொண்டு தண்ணீரை நிறுத்தி விட்டு மீண்டும் தேடினர். அப்போது சிறுகடல் என்ற இடத்தில் சடலமாக கிடந்த சிறுமியை மீட்டனர். இதையடு–்து திருவள்ளூர் தாலுகா போலீசார், சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: