தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 24ம் தேதிக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும்: சுகாதார அதிகாரிகள் முடிவு

திருவள்ளூர், ஏப். 15: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சாபில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக தொழிற்சாலை முக்கிய பிரமுகர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சிகளின் நிர்வாக ஆணையருமான பாஸ்கரன் தலைமையில் நடந்தது. அதில், மாவட்டத்தில் 100 பணியாளர்களுக்கு மேல் பணிபுரியும் 1250 மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளில் சுமார் 10000 பணியாளர்களுக்கு வரும் 24ம் தேதிக்குள்  அந்தந்த தொழிற்சாலைகளில் முகாம் அமைத்து தடுப்பூசி போடுவது என முடிவு செய்யப்பட்டது.

Related Stories: