காஞ்சி, செங்கை மாவட்டங்களில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

காஞ்சிபுரம், ஏப்.15: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அம்பேத்கர் 130 வது பிறந்த நாள் விழா பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில்  கொண்டாடப்பட்டது. காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார் உள்பட பலர் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் மேற்கு மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர நிர்வாகிகள் நாதன், அன்பு, பூக்கடை மணிகண்டன்,.சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைப்புச் செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்எல்ஏ  ஜெயபாலாஜி, நிர்வாகிகள் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, கேயுஎஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், நகர செயலாளர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர். மதிமுக சார்பில்  நகர செயலாளர் மகேஷ் தலைமையில் மதிமுக நிர்வாகிகள் எம்.ஜி.அருள், உமாசங்கர், ராமானுஜம், சரவணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் திருமாதாசன், ஓரிக்கை டேவிட், நகர செயலாளர்கள் கவியரசு, பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அரசு அலுவலர் நலச்சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைப்பின நிர்வாகிகள் துரை, வேல்முருகன், ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் பின்புறம் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, அம்பேத்கர் சிலை அமைப்பு குழு தலைவர் ராமச்சந்திரன், திமுக  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், பேரூர் செயலாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தென்னவன், துணை செயலாளர் கராத்தே பாண்டியன், ஒன்றிய செயலாளர் வேதகிரி, துணை செயலாளர் வெங்கடேசன், மதிமுக ஒன்றிய செயலாளர் பாரத் ராஜேந்திரன், அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் சீனிவாசன், பேரூர் செயலாளர் எஸ்.டி.பிரசாத் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories: