இளம்பெண் தற்கொலை

தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் சாத்துமா நகர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகள் பவித்ரா(23). இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டாலின் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பவித்ரா கடந்த ஆண்டு ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது.

Related Stories: