×

முன்னாள் எம்பிக்கு அஞ்சலி பெண்ணை தாக்கி 14 பவுன் பறிப்பு

திருவாடானை, ஏப்.15: திருவாடானை அருகே நடந்து சென்ற பெண்ணை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 14 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாடானை அருகே உள்ள கர்கதகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராமு மனைவி புஷ்பவல்லி. இவர் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கருக்காத்தகுடி பஸ் ஸ்டாப் அருகே பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று கடையை அடைத்து விட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் புஷ்பவல்லியை வழிமறித்து அடித்து உதைத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 14 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். புகாரின்பேரில் திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு