×

விபத்தில் வாலிபர் பலி

பரமக்குடி, ஏப்.15: பரமக்குடி அருகே மதுரை ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் தடுப்புச் சுவற்றில் டூவீலர் மோதியதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த வாலிபர் பலியானார். ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (22), அஜித்குமார்(22) ஆகியோர் டூவீலரில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்றனர். அப்போது பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் நான்கு வழிச்சாலை பிரிவில் வரும் போது, நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதினர். அதில் அஜித் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சக்திவேல் படுகாயமடைந்தார். பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...