×

மாஸ்க் அணியாதோருக்கு ₹53 லட்சம் அபராதம்


ராமநாதபுரம், ஏப்.15: ராமநாதபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதோரிடம் இருந்து இதுவரை ரூ.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்த முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சுகாதாரத்துறை மூலம் இதுவரை 12 ஆயிரத்து 675 வழக்குகள் பதிந்து 26 லட்சத்து 4 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காவல் துறை சார்பில் 9 ஆயிரத்து 54 வழக்குகள் பதிந்து ரூ.18 லட்சத்து 18 ஆயிரத்து 900 அபராதம் விதித்து, அதில் வசூலான ரூ.11.11 லட்சம் கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. வருவாய் துறை நடத்திய சோதனையில் 516 வழக்குகள் பதிவு செய்து ரூ.ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 அபராதம் விதித்த தில் வசூலான ரூ.42 ஆயிரத்து 600 கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் நடத்திய சோதனையில் 2 ஆயிரத்து 850 வழக்குகள் பதிந்து ரூ.7.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி மாவட்டம் முழுவதும் ரூ.53 லட்சத்து 17 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு