×

ஆபத்தான மின்கம்பம் மாற்றுவது எப்போது?

கீழக்கரை, ஏப்.15: கீழக்கரையில் காட்சி பொருளாக உள்ள மின் கம்பங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கீழக்கரையில் மின் கம்பங்கள் ஊன்றப்பட்டு பல வருடங்கள் ஆனதால் மின் கம்பங்களில் பல சேதம் அடைந்தது. இருந்தாலும் பல தெருக்களில் உள்ள மின் வயர்கள் மிகவும் தாழ்வாக செல்வதாலும் மின்கம்பங்களை மாற்ற கோரி மின்சார அலுவலகத்தில் பல்வேறு தரப்பினர் புகார் அளித்தனர். இதன்பேரில் தெற்கு தெரு, வடக்கு தெரு, நடுத்தெரு, கிழக்கு தெரு போன்ற பல்வேறு தெருக்களில் பழைய இரும்பிலான மின்கம்பங்கள் அருகில் புதிய மாற்று மின்கம்பங்கள் ஊன்றப்பட்டன. ஆனால் அந்த மின் கம்பங்கள் ஊன்றப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரையிலும் மின் வயர்களை மாற்றப்படாமல் மின்கம்பங்கள் காட்சி பொருளாக காட்சி இருந்து வருகின்றன. இது குறித்து முகைதீன் காதர் சாகிபு கூறுகையில், பல ஆண்டுகளாகியும் சீரமைக்காததால், மழை காலங்களில் மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் நிகழும் முன் மாற்று மின் கம்பங்களில் மின் கம்பியை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு