சேலம், ஏப். 15:சேலம் பிராந்திய வருங்கால வைப்புநிதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் இரும்பாலை ரோடு தளவாய்பட்டியில் செயல்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதி ஆணைய பிராந்திய அலுவலகத்தில், ஏப்ரல் மாதத்திற்கான பென்ஷன் குறை தீர்ப்பு முகாம் இன்று (15ம் தேதி) காலை 11 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மண்டல ஆணையாளர் ஹிமான்ஷூ குமார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ், ஓய்வூதியம் தொடர்பான கேள்விகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வு பெறவிருக்கும் உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கலந்த கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.