தமிழ் புத்தாண்டையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

திருச்செங்கோடு, ஏப்.15: திருச்செங்கோடு அருகே காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோயிலில் வீரபக்த ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. நேற்று புத்தாண்டை முன்னிட்டு    ஆஞ்சநேயருக்கு 16 வகை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆட்டையாம்பட்டி, மங்களம், முத்தனம்பாளையம், மல்லசமுத்திரம் மற்றும் சுற்றுப்புற  கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: