தேன்கனிக்கோட்டை, ஏப்.15: தேன்கனிக்கோட்டை அருகே அந்தே வனபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (65). இவர் நேற்று முன்தினம் இரவு, தன் மகன் வீட்டில் சாப்பிட்டு விட்டு தோட்டத்துக்கு காவலுக்காக சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அடையாளம் தெரியாத வாகனம் பொன்னுசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், எஸ்ஐ ரகுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.