கொரோனா விதிகளை மீறி பேருந்துகளில் நின்றபடி பயணிக்கும் பயணிகள்

ஓசூர், ஏப்.15: ஓசூர் பகுதியில் கொரோனா விதிகளை மீறி நின்றபடி பஸ்களில் பயணிகள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஓசூருக்கு சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், அஞ்செட்டி உள்ளிட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர். விவசாயிகள், வியாபாரிகள் டவுன் பஸ்களில் அதிகம் சென்று வருகின்றனர். அதே போல் ஓசூரில் இருந்து தளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் டவுன் பஸ்சில் சென்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க பஸ்களில் பயணிகள் நின்ற படி பயணம் செய்யக்கூடாது என அனைவரும் அமர்ந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. ஆனால், நேற்று ஓசூர் பகுதியில் பல கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் கூட்டம் அதிகளவில் இருந்ததால், பலர் நின்றபடி பயணித்தனர். இதனால் கொரோனா தடுப்பு விதிமுறைகள் காற்றி பறந்து வருகிறது. இதை தவிர்க்க, கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: