சூளகிரி சுற்றுவட்டாரத்தில் தக்காளி நாற்று விலை வீழ்ச்சி

சூளகிரி, ஏப்.15: சூளகிரி வட்டார பகுதியில் காய்கறி, கீரை, ரோஜா, பூதினா, கொத்த மல்லி மற்றும் கேரம், பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விளைவிக்கப்பட்டு வருகிறது. மேலும் சூளகிரி, மில்லத் நகர், மருதாண்டப்பள்ளி, வரதாபுரம், மாரண்டப்பள்ளி, அத்தி முகம், பேரிகை, காளிங்காவரம், சென்னப்பள்ளி, மோதுக்கானப் பள்ளி, உலகம், தியாகசனப் பள்ளி, மாதரசனப் பள்ளி மற்றும் 100க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் நர்சரி பசுமை குடில் அமைத்து தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுக்களை வளர்த்து விற்பனை செய்து வந்தனர். தற்போது கோடை வெயில் அதிகரித்து வருவதால் விற்பனை குறைந்து வருகிறது. இதனால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு நாற்று ₹1க்கு விற்பனை ஆகிறது.

Related Stories: