தொழிலாளியை தாக்கிய கார் டிரைவர் கைது
கிருஷ்ணகிரி, ஏப்.15: பர்கூர் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(42), கூலி தொழிலாளி. இவர் பர்கூர் எம்ஜிஆர் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே சென்ற போது, அங்கு தாயம் விளையாடிக் கொண்டிருந்தவர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பர்கூர் துரைஸ் நகரை சேர்ந்த கார் டிரைவரான திலீப்குமார் (32) என்பவர், சங்கரை ஆபாச வார்த்தையால் திட்டி, அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த சங்கர், பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பர்கூர் எஸ்ஐ அமுதா வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான திலீப்குமாரை கைது செய்தார்.