வெங்கடேசா ஆட்டோ சர்வீசில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி, ஏப்:15: காவேரிப்பட்டணம் அருகே தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பையூரில் இயங்கி வரும் வெங்கடேசா ஆட்டோ சர்வீஸில், கொரோனா விழிப்புணர்வை முன்னிட்டு வாகனத்தில் பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களுக்கு, வெங்கடேஸ்சா ஆட்டோ சர்வீஸ் நிறுவனர் சத்தியநாராயணன், இயக்குனர் மெய்யழகன் ஆகியோர் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், முககவசம், நிலவேம்பு குடிநீர் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோருக்கு முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

Related Stories: