புளுதியூர் சந்தையில் ₹28 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், ஏப்.15: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புதன் சந்தையில் ₹28 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான நடைபெறும் இந்த சந்தையில், கால்நடை விற்பனை பிரசித்தி பெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வாங்க வியாபாரிகள் இங்கு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் மாடு ₹13500 முதல் ₹40500 வரையும், ஆடு ₹3700 முதல் ₹8700 வரையும் விற்பனையானது. இதில் தொத்தம் ₹28 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: