×

பெண் வியாபாரியிடம் காய்கறி, பழங்கள் திருட்டு

அண்ணாநகர்: மேடவாக்கத்தை சேர்ந்தவர் செல்வி(54). ஆதம்பாக்கத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் தனது கடைக்கு தேவையான காய்கறி, பழங்களை உள்ளிட்ட பொருட்களை கோயம்பேடு மார்க்கெட்டில் வாங்கி தனது டு வீலரில் கொண்டுவந்து வாடகை ஆட்டோவில் ஏற்றியுள்ளார். அப்போது, ஆட்டோ டிரைவர் ஆட்டோவை திருப்பி கொண்டு வருவதாக கூறிச் சென்றவர், நீண்ட நேரமாகியும் வரவில்லை. புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் 5வது நுழைவாயலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...