ஊட்டி, ஏப் 14: தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. ஆண்டு தோறும் ேகாடை விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மார்ச் மாதம் இறுதி வாரம் துவங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலரும் ஊட்டியை முற்றுகையிடுவார்கள். இதனால், அனைத்து சுற்றுலா தலங்களும் களைகட்டும். அதுமட்டுமின்றி, அனைத்து ஓட்டல்கள், லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழியும். இதன் மூலம் ஊட்டியில் உள்ள வியாபாரிகளுக்கு கூடுதலான வருவாய் கிடைக்கும். மாவட்டத்தின் பொருளாதாரமும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உயரும். வழக்கம் போல், இம்முறையும் சமவெளிப் பகுதிகளில் வெயில் வாட்டும் நிலையில், மார்ச் மாதம் இறுதி வாரம் முதலே சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகமாக காணப்பட்டது. ஆனால், கடந்த வாரம் கொேரானா பாதிப்பு சற்று அதிகரித்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.