பந்தலூர், ஏப்.14: பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் உள்ள சிவன் கோயிலை நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் உடைத்து திருட முயன்றதாக கோயில் கமிட்டியினர் எருமாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில், எருமாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் எருமாடு அருகே திருமங்களம் பகுதியில் வசித்து வரும் சுரேஷ் (49) என்பவர் கோயிலை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.