தனிமை பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு, ஏப்.14:ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் சேக்கிழார் வீதியில் மூன்று குடும்பத்தை சேர்ந்த 9 பேர் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இரும்பு தடுப்புகள் கொண்டு தடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. சேக்கிழார் வீதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய நேற்று அப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 60க்கும் மேற்பட்ட மக்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: