லால்குடி, ஏப். 14: திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் ரங்கம் ரங்கநாதர் கோயிலின் சார்பு கோயிலாகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா நடைபெறும். கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன் பேரில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தனர்.