அன்பில் மாரியம்மன் கோயில் திருவிழா உள் பிரகாரத்தில் அம்மன் உலா

லால்குடி, ஏப். 14: திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் ரங்கம் ரங்கநாதர் கோயிலின் சார்பு கோயிலாகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா நடைபெறும். கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன் பேரில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தனர்.

தேர் திருவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி கோயிலில் திருப்பணியாளர்கள் கொண்டு கோயில் உள் பிரகாரத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று விடையாற்றி விழா மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அன்பில் மாரியம்மன் கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: