×

கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது

திருச்சி, ஏப்.14: திருச்சி உறையூர் காவல் நிலைய எல்லை பகுதியான குழுமாயிகரை கல்லாங்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக சமயபுரம் வெங்கங்குடியைச் சேர்ந்த பிரவீன்குமாரை போலீசார் கைது செய்து சுமார் 3 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பிரவீன்குமார் மீது ஏற்கனவே கொலை முயற்சி, அடிதடி மற்றும் கொள்ளை வழக்குகள் என திருச்சி மாநகரம் உறையூர் காவல்நிலையத்தில் 2 வழக்குகளும், அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.பிரவீன்குமாரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் ஆணையின் படி திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் பிரவீன்குமாரிடம் குண்டர் தடுப்பு காவல் ஆணை வழங்கப்பட்டது.

Tags : Kunda ,
× RELATED குந்தா சுற்று வட்டார பகுதியில்...