×

தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி திமுக வேட்பாளர் பேட்டி

ராமநாதபுரம், ஏப்.14: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் ஏப்.6 ல் வாக்குப்பதிவு நடந்தது. இத்தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலை அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் மின்சார கோளாறால் மின் தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற நிலை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்க கூடாது என்ற அடிப்படையில் அண்ணா பல்கலையில் ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி விரைவில் அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நான் வாக்கு சேகரிக்க சென்ற போது தொகுதி மக்கள் என்னிடம் முன் வைத்த வாக்குறுதிகள் அனைத்தையும் வெற்றி பெற்ற பின் உடனடியாக நிறைவேற்றுவேன் என்றார். பரமக்குடி தொகுதி வேட்பாளர் முருகேசன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜீவானந்தம் உடன் சென்றனர்.

Tags : DMK ,Tamil Nadu ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...