ப்பூசி போடும் பணி துவக்கம்

தடுசூரமங்கலம், ஏப்.14: சேலம் லீபஜார் வர்த்தக சங்கத்தில், நேற்று கொரோனா தடுப்பூசி முகாமை, மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் லீபஜார் வர்த்தக சங்க செயலாளர் சந்திரசேகரன், தலைவர் மதிவாணன், மாநகராட்சி நல அலுவலர் பார்த்திபன்,  அம்மா மினி கிளினிக் மருத்துவர் அக்சயா, பள்ளப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ  உதவியாளர் பழனியம்மாள், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ்குமார், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் லீபஜார் வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. வரும் 17ம் தேதி வரை  மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

Related Stories: