கிருஷ்ணகிரி, ஏப்.14: தெலுங்கு வருட பிறப்பான யுகாதி திருவிழா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகர்ப்புறங்களில் மட்டுமன்றி கிராம புறங்களிலும் நேற்று காலை முதல் இளைஞர்கள் கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசியபடி தெருக்களில் வலம் வந்தனர். விழாவையொட்டி அதிகாலையிலேயே வீடுகள் முன்பு வண்ண வண்ண பொடிகளால் கோலமிட்டு காலை சுவாமியை தரிசித்து புத்தாடை அணிந்து யுகாதி பண்டிகையை கொண்டாடினர். அதே போல் கசப்புகளை மறந்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் வேப்பம் இலை, வெல்லம் போன்றவை வழங்கினர்.