போச்சம்பள்ளியில் நுங்கு விற்பனை ஜோர்

போச்சம்பள்ளி, ஏப்.14: கொளுத்தும் கோடை வெயிலில் போச்சம்பள்ளியில் நுங்கு விற்பனை கன ஜோராக நடந்து வருகிறது.  தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மத்தூர் பகுதியில் காலை 9 மணிக்கே கடும் வெயில் வாட்டி வருகிறது. வெயிலால் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், மோர், இளநீர் உள்ளிட்டவைகளை பருக துவங்கி உள்ளனர். மேலும் வெயிலுக்கு இதமான வகையில் நுங்கு விற்பனை போச்சம்பள்ளி, மத்தூரில் கன ஜோராக நடந்து வருகிறது.  மத்தூர், போச்சம்பள்ளி பகுதியில் ஏராளமான பனை மரங்கள் உள்ளது. தற்போது சீசன் என்பதால் நுங்கு விற்பனை களை கட்டி வருகிறது. சாலையோரங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள் எதிரரே நுங்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நுங்கு ₹10க்கு விற்பனை செய்யப்பபடுகிறது.

Related Stories: