ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று

கிருஷ்ணகிரி, ஏப்.14:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 547 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 664 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது.

Related Stories: