விவசாயி மாயம்

கிருஷ்ணகிரி, ஏப்.14: காவேரிப்பட்டணம் அடுத்த சுண்டேகுப்பம் காவிரிகான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் (40) விவசாயி. இவருக்கு சரசு என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலை யில், கடந்த 28ம் தேதி வெளியே சென்ற வேடியப்பன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் பல்வேறு இடங்களில் தேடியும் வேடியப்பனை பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மனைவி சரசு அளித்த புகாரின்ேபரில், காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: