தர்மபுரி, ஏப்.14: தர்மபுரி நகரில் கொரோனா தடுப்பூசி முகாமில் ஊசி போட்டுக்கொள்ள பொது மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், ஊழியர்கள் ஊசிபோட முடியாமல் திணறினர். தர்மபுரி சந்தைப்பேட்டை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக, தடுப்பூசி போடும் பயனாளிகளை இருக்கையில் அமர வைத்து தடுப்பூசி குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. அதன் பின்பு ஆதார் எண் பதிவு செய்து, ஒவ்வொரு நபராக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இவ்வாறு தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.