கரூர், ஏப்.14: கரூர் வெள்ளியணை சாலையின் அனைத்து பகுதிகளிலும் தடுப்புச் சுவர் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் வெள்ளியணை வெங்ககல்பட்டி இடையே சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. விரிவாக்கம் செய்த சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் வைக்கும் பணியும் நடந்து வருகிறது.