உத்திரமேரூர்: உத்திரமேரூர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றுபவர் சிவகிருஷ்ணன் (53). கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணன் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்தம், சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. அதில், நேற்று முன்தினம் இரவு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.