ஆவடி: ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. ஆவடி புதிய ராணுவ சாலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. இதன் அருகே அந்த வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்படுகிறது. நேற்று முன்தினம் பணம் எடுக்க வந்தவர்கள், ஏடிஎம்மின் டிஸ்பிளே உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, இதுபற்றி வங்கிக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வங்கி மேலாளர் முனிசேகர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தார்.