×

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: ரூ.10 லட்சம் தப்பியது

ஆவடி: ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. ஆவடி புதிய ராணுவ சாலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. இதன் அருகே அந்த வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்படுகிறது. நேற்று முன்தினம் பணம் எடுக்க வந்தவர்கள், ஏடிஎம்மின் டிஸ்பிளே உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, இதுபற்றி வங்கிக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வங்கி மேலாளர் முனிசேகர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தார்.

இதுகுறித்து ஆவடி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது மர்மநபர்கள், ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இயந்திரத்தை உடைக்க முடியாமல் போனதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது தெரிந்தது. அதிர்ஷ்டவசமாக ரூ.10 லட்சம் தப்பியது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்