ஊட்டி,ஏப்.13: ஊட்டியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்தப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 217 பள்ளிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக 1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட்டு முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்த பின் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.